மேக சந்தேசம் பகுதியாக – 6

तं चेद्वायौ सरति सरलस्कन्धसंघट्टजन्मा

बाधेतोल्क्काक्षपितचमरीबालभारो दवाग्निः।

अर्हस्येनं शमयितुमलं वारिधारासहस्रै-

रापन्नार्तिप्रशमनफलाः सम्पदोह्युत्तमानाम्॥    55

 

ये त्वां मुक्तध्वनिमसहनाः स्वांङ्गभङ्गाय तस्मिन्

दर्पोत्सेकादुपरि शरभा लङ्घयिष्यन्त्यलंघ्यम्।

तान् कुर्व्वीथास्तुमुलकरकावृष्टिहासावकीर्णान्

के वा न स्युः परिभवपदं निष्फलारम्भयत्ना॥      56

 

तत्र व्यक्तं दृषदि चरणन्यासमर्द्धेन्दुमौलेः

शश्वत्सिद्धैरुपचितबलिं भक्तिनम्रः परीयाः।

यस्मिन् दृष्टे करणविगमादूर्द्ध्वमुध्धूतपापाः

कल्पिष्यन्ते स्थिरगणपदप्राप्तये श्रद्धधानाः॥     57

 

शब्दायन्ते मधुरमनिलैः कीचकाः पूर्यमाणाः

संरक्तभिस्त्रिपुरविजयो गीयते किन्नरीभिः।

निर्ह्रादस्ते मुरज इव चेत्कन्दरेषु ध्वनिःस्यात्

संगीदार्थो ननु पशुपदेस्तत्र भावीसमग्रः॥     58

 

प्रालेयार्द्रेरुपतटमधिक्रम्य तांस्तान् विशेषान्

हंसद्वारं भृगुपतिशयोवर्त्मा यत्क्रौञ्चरन्ध्रम्।

तेनोदीचीं दिशमनुसरेस्तिर्यगायामशोभी

श्यामः पादो बलिनियमनाभ्युद्यतस्यैव विष्णोः॥  59

 

गत्वा चोर्द्ध्वं दशमुखभुजोछ्वासितप्रस्थसन्धेः

कैलासस्य त्रिदशवनितादर्पणस्यातिथिः स्याः।

श्रृंगोच्छायैः कमुदविशदैर्योवितत्य स्थितः खं

राशीभूतः प्रतिदिशमिव त्र्यम्बकस्याट्टहासः॥     60

 

उत्पश्यामि त्वयितटगते स्निग्धभिन्नाञ्जनाभे

सद्यः कृत्तद्विरदरदनच्छेदगोरस्य तस्य।

शोभामद्रेः समितनयनप्रेक्षणीयां भवित्रीः

अंशन्यस्ते सति हलभृतो मेचके वाससीव॥    61

 

हित्वा तस्मिन्भुजगवलयं शम्भुना दत्तहस्ताः

क्रीडाशैले यदि च विचरेत् पादचारेण गौरी।

भंगीभक्त्या विरचितवपुः स्तम्भितान्तर्ज्जलौघः

सोपानत्वं कुरु मणितटारोहणायाग्रयायी॥         62

 

तत्रावश्यं वलयकुलिशोद्घट्टनोद्गीर्णतोयं

नेष्यन्ति त्वां सुरयुवतयो यन्त्रधरागृहत्वम्।

तभ्यो मोक्षस्तव यदि सखे धर्मलब्धस्य न स्यात्

क्रीडालोलाः श्रवणपुरुषैर्ग्गर्जितैर्भाययेस्ताः॥   63

 

हेमांभोजप्रसवि सलिलं मानसस्याददानः

कुर्वन् कामात् क्षणमुखपटप्रीतिमैरावतस्य।

धून्वन् वातैस्सजलपृषतैः कल्पवृक्षांशुकानि

छायाभिन्नस्फटिकविशदं निर्विशेस्तं नगेन्द्रम्॥  64

 

तस्योत्सङ्गे प्रणयिन इव स्रस्तगंगादुकूलां

न त्वं दृष्ट्वा न पुनरलकां ज्ञास्ससे कामचारिन्।

या वः काले वहतिसलिलोद्गारमुच्चैर्व्विमानैः

मुक्ताजालग्रथितमलकं कामिनीवाभ्रवृन्दम्॥   65

 

காற்றடிக்கும்போது சரளைக் கற்கள் தம்முள் உராய்ந்து உண்டாகும் காட்டுதீ, அதன் தீப்பொறிகளாலும் கவரிமான்களின் வால்முடிகளாலும் அந்த மலையைப் சூழ்ந்துகொள்வ தாக இருந்தால் தாங்கள் அந்தக் காட்டுத்தீயை ஆயிரம் நீர்த் தாரைகளால் முழுமையாக அணைத்துவிட வேண்டும். “நல்லோருக்கு செல்வம் வந்தடைவதன் பலன் ஆபத்தில் அகப்பட்டவர்களின் துயர் தீர்ப்பது அல்லவா?” அங்கே ஒரு பாறையின்மேல் தெளிவாகக் காணப்படுவதும், சித்தர்கள் எப்போதும் பூஜை செய்வதுமான கலாதரனின் திருப்பாதங்களைத் தாங்கள் பக்தியோடு வலம்வர வேண்டும். அத் திருவடிகளை ஒருமுறை கண்ட உடனேயே பாவங்களெல்லாம் அகன்ற ஆஸ்திகர்கள் அவர்களுடைய உடல்கள் அழிந்தபின்னர் நிரந்தரமான சிவகணங்களின் இடத்தை அடையத் தகுதியுள்ளவர்களாகிறார்கள். அங்கே மூங்கில்களில் காற்று வந்து நிறையும்போது அவை இனிமையான ஒலியை எழுப்புகின்றன. தொண்டை பக்குவமடைந்த கின்னரப் பெண்மணிகள் ‘திரிபுர விஜயம்’பாடலைப் பாடுகின்றனர். குகைகளில் ஆர்த்து முழங்கும் தங்களது இடியோசையையும் சேர்ந்துத சேர்த்துத் தாங்கள் முரசொலி போன்ற ஒலியை எழுப்பினால் பசுபதிக்கான சங்கீத உபகரணங்கள் முழுமைடையும். இவ்வித விசேஷங்களையெல்லாம் கடந்து பரசுராமனின் புகழ்பாடும் கிரௌஞ்சரந்திரத்தின் வழியாக மகாபlலியைத் தாழ்த்துவதற்காக அவதரித்த மகாவிஷ்ணுவின் திருக்கழலிணை போல் கிடைமட்டமாக நீண்ட வடிவுபூண்டு வடக்கு திசைக்குச் செல்லுங்கள். அங்கே சென்றீர்களானால் ராவணனுடைய கைகளால் அமுக்கப்பட்டு பள்ளத்தாக்குகள் நெரிந்துபோனதும் வானுலக மங்கையரின் கண்ணாடியுமான கைலாசத்தின் விருந்தாளியாகலாம். ஆம்பல் பூவின் நிறத்தையொத்த வெண்ணிறமான கொடுமுடிகளுடன் ஆகாயத்தில் பரந்து காட்சியளிக்கிற அது நாள்தோறும் குவிந்துகூடுகிற முக்கண்ணரின் உரத்த சிரிப்பைப்போல இருக்கிறது. உடைந்த நீலாஞ்சனக் கல்லின் மினுத்த நிறமொத்த தாங்கள் அப்போது துண்டிக்கப்பட்ட யானைத் தந்தத்தின் துண்டு போல இருப்பீர்கள். வெண்மையான அந்தப் பர்வதத்தின் அருகுசேர்ந்து நிற்கும்போது பலராமனின் தோளில் கறுப்பு அங்க வஸ்திரம் இட்டதைப் போல்

-9-

தோற்றமளிபீர்கள். கண்ணிமைக்காது பார்த்துக்கொண்டே இருக்கத் தூண்டும் தங்கள் அழகினை நான் என் அகக் கண்களால் காண்கிறேன். அங்குள்ள கிரீடா சைலத்தில் பார்வதிதேவி கால்நடையாக சஞ்சரிப்பதாக இருந்தால் தாங்கள் தங்களது உள்ளிருக்கும் நீரை உறையச் செய்து உடலை மடிப்புகளாகச் சுருக்கி முன்னே சென்று பார்வதிக்கு மணிமயமான நீர்த்தடங்களுக்கு செல்வதற்கான படிகளாக அமைய வேண்டும். நிச்சயமாக அங்கே மெல்லியலார் தமது கைகளிலுள்ள வளையல்களில் பதித்துள்ள வைரங்களால் தங்கள் உடலைத் துளைத்து நீர் ஒழுகச் செய்து தங்களை ஒரு நீர் சேமிப்புக்கலமாக்கி அங்கேயே நிறுத்தி விடுவார்கள். நண்பரே, வேனிற்காலத்தில் தங்களுக்குக் கிடைத்த உங்களை அவர்கள் விட மறுத்தார்களானால் அந்த இன்பவல்லிகளைக் காது கிழியும்படியான இடியோசைகளால் பயப்படுத்தி விட்டுவிடுங்கள். மானஸ ஸரஸிலுள்ள பொன் தாமரை மலர்கள் உண்டாக்கும் நீரை எடுத்துக் கொண்டும், தேவையானால் ஐராவதத்திற்கு முகபடாம் இட்டது போன்ற மகிழ்ச்சியை அளித்துக் கொண்டும் கற்பக விருட்சத்தின் இளம் தளிர்களான ஓலைகளை தங்களது கைகளால் அளைந்து கொண்டும் நீர்முகிலே, தாங்கள் அந்த பர்வத சீமானின் அழகை அனுபவித்துக் கொள்ளுங்கள். காதலனின் மடியில் அமர்ந்திருப்பதுபோல் அங்கு காணப்படுகிற கங்கை என்னும் பூந்துகில் அணிந்த அளகநந்தாவைப் பார்த்துவிட்டால் தாங்கள் அவளை விட்டுப் போக மாட்டீர்கள். அவள் மிக உயரமான ஏழு மாடிகளைக் கொண்ட மாளிகையில் இருந்துகொண்டு தகுந்த பருவநிலைகளில் பொழிந்துகொண்டிருக்கும் கார்மேகக் கூட்டத்தை ஒரு காதலியின் முத்துப் பட்டத்தால் அலங்கரித்த கார்குழல் கற்றைகளைப் போல் அணிந்துகொண்டு காட்சியப்பாள். இந்தக் காட்சி கைலாசத்தின் சரிவின் மத்தியிலிருந்து ஒழுகும் கங்கையின் கரையில் அமைத்துள்ள அளகாநகரியை ஒரு காதலனின் பார்வையில் விளக்கும் முறையிலானதாகும்.